search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருநெல்வேலி கொள்ளை"

    பாளை அருகே ஆட்டோ டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

    நெல்லை:

    பாளை வி.எம்.சத்திரத்தை அடுத்த கிருஷ்ணாபுரம் சாந்தம் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ராஜா சிங் (வயது 57), ஆட்டோ டிரைவர்.

    சம்பவத்தன்று ராஜாசிங் குடும்பத்துடன் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். நேற்று வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைந்து கிடந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த ராஜா சிங் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3½ பவுன் தங்க நகை, 400 கிராம் வெள்ளி, விலைஉயர்ந்த பொருட்கள் ஆகியவை திருட்டு போயிருந்தது. திருட்டுப் போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ 2 லட்சம் ஆகும்

    வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதுகுறித்து ராஜா சிங் சிவந்திபட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    ×